இடுகைகள்

அழகியல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை- எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது. நாட்குறிப்பு அழகு உருவம் சார்ந்ததன்றி, உணர்வு சார்ந்தது. உணர்வுகள் வெளிப்படுத்தும் பிம்பங்கள் அனைத்தும் அழகானவை. விழி காணும் நிஜங்கள் மனம் சென்றடைவதில்லை. மனம் உணர்ந்த நிஜங்கள் விழி சேரும்போது அனைத்தும் அழகானவை. வான் விரிந்த உலகில் வேரூன்றும் பசுமை குவியல்கள், அதனுள் அமர்ந்திருக்கும் வண்ண மலர்கள், கடல் பருகிய நீலம், என எண்ணற்றவை பூமியின் அழகோவியங்கள்.  " அழகு"  தமிழ் அகராதியின் முதல் உயிரும், முதல் மெய்யும் காவல் நின்று நாவில் " ழகரம்" சுழல்வதும் அழகு. கண்களின் திரை அகன்று உற்று நோக்கிய நிகழ்வுகள் அழகியலாய் உங்கள் பார்வைக்கு....... கவிதை வெண்கதிர் மறைத்த வானின் பிறை அ...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின் பரிணாமங்கள்... கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிருந்தேன்...

கண்ணாடி

படம்
 கண்ணாடி உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தன் உணர்வுகளை  யாரிடமும் வெளிப்படுத்த முடியாத தருணங்களில் தீர்ப்பின்றி, கேள்வியின்றி, மௌனமாக உடன் நிற்கும் கண்ணாடியை  ஒரு நெருங்கிய தோழியாகப் பார்க்கிறது. கண்ணீர், இன்பம், அழகு, கண்ணியம், ரகசியம்- அனைத்தையும் அனுமதி கேட்டே ஏற்றுக்   கொள்ளும் அந்த மௌன சாட்சி தனிமையின் பாதுகாப்பையும், சுயமரியாதையின் எல்லையையும் மென்மையாக வெளிப்படுத்துகிறது. கவிதை எதிர்மறை எண்ணங்கள் மெல்லிய மனதை சலசலக்க, இமைகளை நீராட்டி வெளிவந்த நினைவு கரைசலை, கையால் துடைத்த என்னை யாரும் கவனிக்க மறுத்ததால்  அமைதியுற்றேன் - ஆனால் அவள் கவனித்தாள். உதட்டின் காவலை மீறி  வெளிவந்த முத்துக்கள்- சிதறாமல்  உள்வாங்கிய மெல்லிய உணர்வை யாரிடமும் பகிராமல் இன்புற்றேன் - அதை அவள் உணர்ந்தாள் முல்லை மொட்டுக்கள் விரிந்தும் விரியாமலும் என் கூந்தலில் வீற்றிருந்த அழகை சரிபார்க்க அவள் இசைந்தாள். ஆடைகள் தன்நெறி மாறாமல் கண்ணியத்துடன் ஒத்துழைக்க அவள் காவலானாள். இரவு பகல் பாராமல் எனக்காக விழித்திருந்து நான் கேட்டதை, நான் பார்த்ததை, நான் உணர்ந்ததை அப்பழுக்கில்...

கனம்

படம்
ஈரம் மறுத்த வளம் சுவாசத்தின் சுமை, கனி விரும்பா கொடியினம் நாவிற்கு சுமை, இதழ் சுருங்கிய மலர்கள் அழகிற்கு சுமை, இருள் அணைத்த மின்விளக்கு விழிப்பதற்கு சுமை, கிளைகளின் குடியிருப்பில் புயலின் வரவேற்பு சுமை, நீர்  பருகிய நிலம் வறட்சியின் சுமை, முகில் ஊடுருவும் பயணத்தில் நிலம் தாங்கும் உயிர்கள் சுமை, பண்பட்ட இதயம் ஊடலில் சுமை, மௌனம் கலைத்த விழிநீர் இரகசியத்தின் சுமை, இரவில் விழித்திருக்கும் நினைவுகள் நிம்மதியின் சுமை, கற்பனையின் அலைவரிசையில் மெய் வருடும் நுனிவிரல் சுமை, நிசப்தம் உறங்கும் நிலத்தில் முகவரி தேடும் காற்றொரு சுமை, கைவலையின் கலகலப்பில் மழலையின் நித்திரை சுமை, முகம் மலர திரையிட்ட காலங்களால் பிறவியும் சுமை. ஆற்றாமையின் துணையில் நிழல் சாய்வதும் சுமை- அழைத்துச் செல்ல  வலிமையில்லை பின்தள்ள புரிதலுமில்லை..

அணங்கு

படம்
உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந்தேன். ...

அறியாதது

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்த கீறல்கள...

தூண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும்  அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின்  தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது. கவிதை காற்றசையா வீதிகளில் இறகின் சுவாசம் நுகர்ந்து முகில் நெய்த கூரையில், இரவின் காவல் கண்களை மறைக்க உயிர் சுமப்பது துணிவு. துயில் ஆளும் ராத்திரியில் தரைப் படையின் மௌனத்தில் இருளின் அச்சம் கடந்து சிறு பொறி நிலமாளும்  வரலாற்றின் நம்பிக்கை- துணிவு. நீர் தழையும் நிலத்தில் இனம் காக்க  எல்லை  வகுத்து,  நிலம் செரித்து படையெடுக்கும் அகந்தை மாறா மனிதர்களின் தடை வளர்ப்பது த...