அழகியல்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை- எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது. நாட்குறிப்பு அழகு உருவம் சார்ந்ததன்றி, உணர்வு சார்ந்தது. உணர்வுகள் வெளிப்படுத்தும் பிம்பங்கள் அனைத்தும் அழகானவை. விழி காணும் நிஜங்கள் மனம் சென்றடைவதில்லை. மனம் உணர்ந்த நிஜங்கள் விழி சேரும்போது அனைத்தும் அழகானவை. வான் விரிந்த உலகில் வேரூன்றும் பசுமை குவியல்கள், அதனுள் அமர்ந்திருக்கும் வண்ண மலர்கள், கடல் பருகிய நீலம், என எண்ணற்றவை பூமியின் அழகோவியங்கள். " அழகு" தமிழ் அகராதியின் முதல் உயிரும், முதல் மெய்யும் காவல் நின்று நாவில் " ழகரம்" சுழல்வதும் அழகு. கண்களின் திரை அகன்று உற்று நோக்கிய நிகழ்வுகள் அழகியலாய் உங்கள் பார்வைக்கு....... கவிதை வெண்கதிர் மறைத்த வானின் பிறை அ...